விடுதலைப் புலிகளின் 2005-ம் ஆண்டு அறிவிப்பு இந்த தேர்தலிலும் தாக்கம் செலுத்துமா?
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், நாட்டை இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை ஓரளவு மீட்டு இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்ற கருப் பொருளை முன்னிலைப்படுத்திய ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
போரை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்பதை முன்னிலைப்படுத்தி 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றதை போன்று, பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்டோம் என்ற கருப் பொருளை முன்னிலைப்படுத்தி ரணில் விக்ரமசிங்க தற்போது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை, 2006ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், நான்காவது ஈழப் போர் ஆரம்பமானது.
இந்த போர் நிறுத்தம் காணப்பட்ட காலப் பகுதியிலேயே 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டிய நிலையில், 2006ம் ஆண்டு மீள போர் ஆரம்பமானது.
2005ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என வடக்கு, கிழக்கு மாகாண மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது. இதனால், அந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிப்பதை பெருமளவு புறக்கணித்திருந்தனர்.
அந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் வாக்களிக்காமையே, ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகின்றது.
